Friday, 10 July 2020

நேற்றின் வாய்த்துல்லியம்

கண்டிறாத நடுநிலம் அரும்பிய புல்
என்னவோ நிறம் கொள்ள இருந்தது
கிடுகிடுக்கும் எண்ணிக்கை காதடைக்க கொல்லையில் கருகும் பெருநெடி

குறிபிழைத்த மிச்சம் நீரில் ஊறவைத்த பாளையாய் அலைவு ஏரணம் கூறும்

ஆந்தை குமுக நிமித்தம் பேசி அசை பிரித்த  தனிச்சொல் மென் மெதுவாய் படர்க்கையாக
தீம்கிளவி கலந்து மேலாக ஊர்ந்த நேற்றின் வாய்த்துல்லியம் சுரமேதும் இல்லாமலே.


No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...