Thursday, 12 October 2017

ஆயிரம் எலிகள்



ஒரு பூனை பதுங்க ஆயிரம் எலிகள்
கொஞ்சம் நாய்கள் தூரத்தில்
தூங்குமூஞ்சி மரம் காதயிடைஐ வெளியில்
மினுக்கும் விளக்கு சுற்ற துடிக்கும்
காத்தாடிக்கு அடியில்
கண்ணா நீ தூங்கடா.

துயிலாயோ கண்ணா.



மடி விரித்து நிறம் உடுத்தி
ஜமிக்கியாய் அசைந்து திரும்பும் திரை
மறைவில்  வரும் நுரையி னொலஞ்சி
துயிலாயோ கண்ணா.

விழி பிதறல்





தீட்டி முடித்த வண்ணம் இரண்டில்
ஒன்றின் இரவில் கனாக்கண் டெழும்
குழவியின் கூச்சல் முடிவில்
விழி பிதறலின் வெப்பம் தகித்த குளிந்த
விடியல் தூர இடைஐ வெளியில்
கண்ணா நீ தூங்கடா.


கண்ணா நீ தூங்கடா.



வந்து திரும்பும் அலையின்
பின்னே உலரும் மணல் போல
மன வெளியில் அலையும்
கண்ணா நீ தூங்கடா.

நீட்டாக அலையும் கடலின்
நீள் வண்ணத்தில் உறையும்
நிலவு போல எண்ண அலை
நீந்தும் நீள்வண்ணக் கண்ணா நீ தூங்கடா.

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...