Sunday, 5 July 2020

வக்கற்ற காலத்துளிர்

மாற்றி அழைக்கப்பட்ட பெயருக்குள்
நில்லாமல் அதனில் அதனாக சொட்டி
வெட்ட வெளியெங்கும் தெளிக்கும் தூரல்
நிலம் துளைக்க தளிரின் வால்நுனி தங்கிய வக்கற்ற காலத்துளிர் அதுவாக உறையும்

கரைக்குக் களைப்பு வற்புறுத்துகிறது
தட்டி உலாவி இழுத்த கட்டளைக் கடினம்

கலங்கிய கழியில் நிலா வெளிச்சம் தூவுமா  தெரியாது காரணம் நிலைத்து விட்ட
நேற்றில் சுவற்றில் அடைத்து வெளிச்சம் படாமல் பொத்தி வைத்துள்ளன விரல்கள்.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...