மார்கழியைக்
காணவில்லை
மார்கழியில்
காணவில்லை
இதெப்படி
சொல்வதென்று
தெரியவில்லை
தத்தளிக்கும்
தண்ணீரில் படுத்திருக்கும்
வெள்ளாம்பலையும்
சேதாம்பலையும்
இவை
மட்டும் தான் காணவில்லையா
அறியவில்லை
இவ்வருடத்தின் சோகமா விழியின்
சோகமா
அறியவில்லை
மார்கழியைத்
தேடுகிறேன்.
No comments:
Post a Comment