Monday, 2 July 2018

வேறொரு பாடல்


திரும்பி பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே
தூரிகை தூற்றிய வண்ணங்களில்
ஒளிந்த அஞ்சி
மயங்கிய ஆத்தா
பாடிய பாட்டே
திரும்பி பாடிய கண நாழியில்
உயிர் தீண்டிய பாட்ட
தூரமிருக்கும் காய் பறித்த பாட்ட
என் பாட்டல்ல
என் கிளவி
அவ கெளவனுக்கு
பாடிய பாட்டு விட்டு
போனால் மீட்டிய பாட்டு
கவலை மீண்ட பாட்டு
நீட்டா வெளி தேசம் சென்ற பாட்டு
பொன்னியின் தாகம் தீர்க்கும் பாட்டு
எத்திசை செல்லினும் அத்திசை ஒலிக்கும் இது
வேறொரு பாடல்
அப்பாடலை நாலு
வளை வண்டுகள் மட்டுமே கேட்டன.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...