விட்டுச் சென்ற முட்டை யொன்று
குட்டி போட்டுப் போனதிசை
நோக்கி நிமிர்ந்து நிற்கிறது
காடு கொன்று நாடு கொன்று
திரியும் நாழியில் தாகமெடுத்து
தத்தளிக்கும் தண்ணீர் கனவுடன்
நீர் உடுத்துபவள்
ஆடையுரித்து கிடக்கிறாள்
அஞ்சி அதியா
உன்னூரிலிருந்து இறங்கும் அதற்காக
என்னூரில் கவட்டிடை கம்பு வைத்து
கால் விரித்து வளைந்து குனிந்த
ஔவைக்கு முட்டையிட்ட குட்டி.
No comments:
Post a Comment