Monday, 2 July 2018

வானமெல்லாம் வெயில் செய்கின்றன


ஓர்யான் துஞ்சாது விடுகையில் பதினைந்தாம்
நாழிகையை இறுதிக் கொண்ட இடையிரவு
நீட்டான கானல் கனவில்
பிசிரும் நீர்த்துளியால் நிலம்
விம்மி புடைத்து மேலெழும்பி முட்டி
குவிமுகிழ் எருக்கென
துளை காட்டி நிற்கும் நேரம்
மழை பெய்யா நின்றது
இதெழுத  முண்டாசு கவிஞனின்
மூக்கின்மீது வைத்து  தீட்ட
எடுத்த கோல் அதன் தொழில் மறந்து
விழிப்பில் இது காரல்ல ஏனெனில்
வானமெல்லாம் வெயில் செய்கின்றன.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...