Sunday, 23 September 2018

பேரரசன் பிடியில்


கால இறுக்கத்தில்
காற்றெல்லாம் நொறுங்குகின்றன
இசங்களும் இயங்களும்
சார்பு குடை பிடிக்கின்றன
வெண்ணி கோல்லெடுத்து எழுதிவிட
மொழி காலில் விழுந்தேன்
அ வெடுத்தேன்
ஆஆஆ வென்றது
கவெடுத்தேன்
ங் இடையில் மீளாமல் சிக்கியது
காகா உள்ளிரைச்சல் கொண்டது
வேண்டாம்
புரிந்தது நானும்
அதற்குக் காவாகிப்போனது
ம் மிற்குள் அடங்கி விடுவோம்
என்று நான் என்னும் கொத்தளத்தில் அமர்ந்த
பேரரசன் பிடியில் இன்று ம்

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...