Sunday, 23 September 2018

நீ யாச்சும் போகாதை


சிதறுகின்ற நொடிகளில் வந்தாய்
நீர் சூடியவளின் தலை வழியெங்கும்
அளவின் பெருக்கம் கேட்க
வேண்டும் அருகில் நீ
செலவு அழுங்க சொல்ல
இல்லை தோழி
குறிப்பறிய செவிலி இல்லை
பார்த்து வருந்தும் நற்றாயோ
நாலு காத தூரத்தில்
கண்டு சொல்லும்
கண்டோர் புரியாமையில்
அறம் தேடியே அறிவோர்
ஊடலிடம் பாணன்
நீ யாச்சும் போகாதை யான்.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...